tamilnadu

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் பலி

காஷ்மீர்,மே 16-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட னர். பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் உயிரிழந்தார். ஜம்மு -காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் தலிபோரா பகுதியில் ஒரு வீட்டில் 2 பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வியாழனன்று அதிகாலை பயங்கரவாதிகள் தங்கியுள்ள பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். இதனை அறிந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். அதிகாலை முதல் நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். மேலும் 2 வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்துள்ளனர். அப்பகுதி யில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையை அடுத்து புல்வாமா மாவட்டத்தில் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.